இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தங்களது மாடல்-3 ரக கார்களை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா மாடல்-3 மின்சார கார்:
டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை தயாரிப்பதில் முன்னணி நிர்வாணமாக திகழ்ந்து வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் ‘மாடல்-3’ என்னும் மின்சார கார் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் பயனாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இந்த ‘மாடல்-3’ ரக கார் அதிகமாக விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐரோப்பா நாடுகளில் இந்த வகை கார் அதிகமாக விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்த மாடல்-3 ரக மின்சார கார்களை இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த போவதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாதத்தில் அறிவித்திருந்தார். தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் தகவல் வெளியாகியள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் ஆகும் எனவும் மேலும் இதற்கான முன்பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மாடல்-3 ரக கார்கள் சுமார் 55 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த 2016ம் ஆண்டே டெஸ்லா நிறுவனம் தங்களது மினசார கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது, சில காரணங்களால் அது நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.