ஹேமா மேல பாரதிக்கு இருக்குறது ரத்த பாசமா?? வளர்த்த பாசமா?? – தீவிரமாக திட்டம் போடும் வெண்பா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி அடம்பிடித்து கண்ணம்மாவை பாரதியிடம் ட்ரீட்மென்ட் எடுக்க ஒத்துக்கொள்ள வைக்கிறார். மேலும் வெண்பா தனது பழைய நியாபகங்களை எல்லாம் யோசித்து பார்க்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் வெண்பாவிற்கு ஹேமாவிற்கும் சண்டையாகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று வெறித்தனமாக வெண்பா தனது பழைய நினைவுகளை நினைத்து பார்த்து எப்படியாவது பாரதியை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று யோசிக்கிறார். பாரதியிடம் முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்று அழைக்க பாரதி ஹேமாவை அழைத்து கொண்டு வர வெண்பா கடுப்பாகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எதுக்கு ஹேமாவை கூட்டிட்டு வந்த என்று வெண்பா கோவப்பட அவள் வந்தா உனக்கு என்ன என்பது போல கேட்கிறார். கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும் ஹேமாவை வச்சுக்கிட்டு எப்படி பேசுறது என்று சொல்ல பாரதி ஹேமாக்கு தெரியாமல் எந்த விஷயமும் வேண்டாம் என்று சொல்கிறார். ரெஸ்டாரண்ட்டில் ஜூஸ் ஆர்டர் செய்ய என்ன விஷயமா பேசணும் என்று கேட்கிறார்.

வெண்பா தனக்கு மனதிற்கு எதோ போல இருப்பதாக சொல்கிறார். அப்பொழுது ஜூஸ் வர அதனை தெரியாமல் ஹேமா வெண்பா மீது கொட்டிவிடுகிறார். இதனால் கோவமடையும் வெண்பா ஹேமாவை கண்டப்படி திட்டுகிறார். அடிக்கவும் செல்கிறார். இதனை பார்த்துக்கொண்டிருந்த பாரதி வெண்பா என்று கத்த அப்பொழுது தான் சுயநினைவுக்கு வருகிறார் வெண்பா.

ஹேமா பயந்து விட பாரதி சமாதானம் செய்கிறார். வெண்பாவிடம் ஒரு பைல் வாங்க வேண்டும் என்று வெண்பா வீட்டிற்கு செல்கிறார் பாரதி. ஹேமாவை காரிலேயே உட்கார வைத்து விட்டு உள்ளே செல்கிறார். வெண்பா உள்ளே பைலை தேட அங்கு இருக்கும் லேப்டாபில் 8 வருடத்திற்கு முன்பாக பாரதி வெண்பா திருமணம் செய்ய போன போது எடுத்த புகைப்படம் இருந்தது.

அதனை பார்த்து பாரதி ஷாக் ஆகிறார். என்ன இதெல்லாம் என்று பாரதி யோசித்துக்கொண்டிருக்க ஹேமா உள்ளே வருகிறார். உடனே லேப்டாபை மறைகிறார் பாரதி. ஹேமாவை காரில் உட்கார சொல்லிவிட்டு வர வெண்பா விடம் போட்டோவை காட்டி இன்னும் இதை ஏன் வச்சு இருக்க என்று கேட்கிறார். என்னால பழசை மறக்க முடியல என்று வெண்பா சொல்ல பாரதிக்கு கோவம் வருகிறது.

8 வருடத்திற்கு முன்னாள் நான் முட்டாள் தனமா எடுத்த முடிவு அது. இப்போ என் ஹேமா தான் எனக்கு முக்கியம் என்று சொல்ல அதற்கு வெண்பா இந்த அனாதை குழந்தைக்கு என்ன ஏன் இப்படி பண்ற என்று சொல்லிவிட பாரதிக்கு கோவம் தலைக்கேறுகிறது. அங்கிருந்து கிளம்பி வருகிறார்.

பாரதி போனவுடன் வெண்பாவிற்கு இது பாரதிக்கு இருக்க ரத்த பாசமா வளர்ந்த பாசமா?? என்று டெஸ்ட் எடுத்து பாத்தே ஆகணும் என்று யோசிக்கிறார். வீட்டிற்கு வரும் பாரதி நடந்தவற்றை சௌந்தர்யாவிடம் சொல்ல சௌந்தர்யாவிற்கு அதிர்ச்சியாகிறது. அதன் பிறகு பாரதி ஹேமாவை பற்றி கவலை பட சௌந்தர்யாவிற்கு அது மிகவும் திருப்தியாகவும் இருந்தது. இதோடு எபிசோடும் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here