எந்திரன் படத்தை நிஜமாக்கும் டெஸ்லா – மனிதர்களுக்கு உதவும் அதிநவீன ரோபோக்கள்!!

0

எந்திரன் திரைப்பட பாணியில் மனிதர்களுக்கு உதவும் அதிநவீன மனித ரோபோக்களை டெஸ்லா நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது.

அச்சு அசல் மனிதனைப் போலவே ஒரு எந்திரத்தை உருவாக்கிட வேண்டும் என்பது மனிதனின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. அந்தக் கனவு பல்வேறு கட்டங்களைக் கடந்து தற்போது மனிதனைப் போலவே ஒரு ரோபோவை உருவாக்க வைத்துள்ளது. ஆம், டெஸ்லா நிறுவனம் அந்த முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது.

மனிதர்களுக்கு தீங்கு செய்யாமல் கட்டளையிடும் வேலைகளை மட்டும் துல்லியமாகவும் அதே சமயம் விரைந்து செய்து முடிக்கும் நவீன மனித ரோபோக்களை தயாரிப்பதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ரோபோக்கள் அறிமுகமாகலாம் என டெஸ்லா ஏலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பயன்படுத்தி இந்த ரோபோக்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மனித ரோபோக்கள் வருங்காலத்தில் பல செயல்களுக்கு மனிதர்களின் தேவையை பெருமளவில் குறைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here