தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் மதுபானம் விற்பதற்கும், கடைகள் திறப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுவிலக்கு மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது தற்போது தமிழகத்தில் உள்ள மது கடைகளில் 90ML பாக்கெட்டில் மதுபானம் விற்பனை செய்வதற்கும், மதுக்கடை திறப்பதற்கான நேரத்தை மாற்றுவதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இது குறித்து அறிவிப்பு வெளியிட கொஞ்சம் கால அவகாசம் ஆகும். மேலும் இனி மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அந்த கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் முதன் முதலாக மாணவர்களின் கற்றல் குறைபாடுக்கு புதிய திட்டம்.., அரசு அறிவிப்பு!!