தமிழக மக்களே உஷார்.., இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு., மாவட்ட ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை!!!

0
தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 2547 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் ஒட்டியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ கூடாது. மேலும் குழந்தைகளை ஆற்றின் பக்கம் செல்ல விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here