தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரும் 2024-25 ஆம் கல்வியாண்டில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கப்பட்டு வங்கி கணக்கு தொடங்கும் வசதியை ஏற்படுத்தி தர இருப்பதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இதன் பின்னர் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற இடங்களுக்கு கட்டாயமாக பார்க்கப்படும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ்களோடு முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின், அதற்குரிய சான்றிதழும் என 4 வகை சான்றிதழ்களை, EMS தளத்தின் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? உங்களுக்கான முக்கியமான மாஸ் அப்டேட்., யூஸ் பண்ணிக்கோங்க!!!