தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் 10 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசுக்கு பரிந்துரை :
தமிழகத்தில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. இதனை கருத்தில் கொண்டு, தொற்று பரவலை தடுக்க பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடரப்பட்டது. இந்த நிலையில், மாநிலத்தில் தொற்று பரவல் ஓரளவு குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளிகளை திறப்பது பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வருக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன்படி, பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என அரசுக்கு பரிசீலனை அனுப்பியுள்ளார். இதுபோக, நடத்தாமல் விட்ட இரண்டு திருப்புதல் தேர்வுகளில் ஒன்றை மட்டும் நடத்தி முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் பேட்டியில் தெரிவித்தார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்