ரேஷன் கடைகளில் ரூ. 150க்கு மலிவு விலை மளிகைப் பொருட்கள் – அமைச்சர் அறிவிப்பு..!

0

கொரோனா பாதிப்பு மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கி விட்டதால் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.ஊரடங்கின் நாட்களும் நீடித்துள்ளது.கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகைப் பொருட்கள் இன்று முதல் மலிவு விலை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

கொரோனா நிவாரணம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு அன்றாட வசதிகளை செய்து தர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரண பணமும், மாத ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கியது.இப்பொழுது உணவுக்கு அவசியமான மளிகை பொருட்கள் அதிக விலைக்கு விற்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மளிகை பொருட்களை மலிவு விலையில் ரேசன் கடைகளிலேயே பெற்றுக்கொள்ள அரசு ஏற்பாடு செய்து வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்,

மலிவு விலை மளிகை பொருட்கள்

ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் சூழலில் மலிவு விலை மளிகை பொருட்கள் இன்று முதல் 500 ரூபாய்க்கு மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, மிளகு, வெந்தயம் உள்ளிட்ட 19 வகையான மளிகைப் பொருட்கள் ரேசன் கடைகளில் கிடைக்கும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர். காமராஜ் இன்று முதல் மலிவு விலை மளிகை பொருட்கள் வழங்கப்படும்.மே மாத விலையில்லா ரேஷன் பொருட்கள் தினமும் 150 பேருக்கு டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும் எனக் கூறினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here