தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் அவர் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பழைய காதல்கள் ஏன் முறிந்தன என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
சிம்புடன் காதல்..!
ஆரம்பத்தில் நடிகை நயன்தாரா சிம்புவை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அப்போது வெளியாகின. பிறகு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர் அந்த சமயத்தில் இந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டது.
பிரபுதேவாவுடன் காதல்..!
பின்னர் பிரபுதேவாவுடன் காதல் கொண்டார் நயன்தாரா. இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தனர். பின்னர் பிரபுதேவா அவரது மனைவியை விவாகரத்து செய்தார். பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள இந்து மதத்துக்கு கூட மாறினார் நயன்தாரா ஆனால் திடீரென்று காதல் உடைந்தது. இருவரும் பிரிந்தனர்.
பழைய காதல்கள் பற்றி நயன்தாரா..!
பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கத் தொடங்கினார். இப்போது இவர்கள் காதலித்து வருகின்றனர்.
நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது. அங்கிருந்து அது வெளியேறிவிடும். நம்ப முடியாத ஒருவருடன் வாழ்வதை விட தனியாக வாழ்வதே சிறந்தது என்று முடிவு செய்ததால் கடந்த காதல் உறவுகளை முறித்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |