தமிழகத்தில் போராட்டம் நடத்தினால் இது தான் நடக்கும் – ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் போராட்டம் நடத்தினால் இது தான் நடக்கும் - ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் போராட்டம் நடத்தினால் இது தான் நடக்கும் - ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!!

சில மாநிலங்களில் அதிகரித்து வரும் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என முதல்வர் ஸ்டாலின், புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்:

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் பணி முடிந்தாலும், சிறுசிறு பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பு இருப்பதால், போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கர்நாடகா போன்ற மாநிலத்தில் அதிகரித்துவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என முதல்வர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு உதாரணமாக, மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணிடம் தகராறு செய்த பாஜக முகவர், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மைக்கேல் பட்டி மாணவி மரணம் தொடர்பாக ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 32 ஆர்எஸ்எஸ் இயக்க மாணவர்களில், 29 பேர் தற்போது சிறையில் உள்ளனர். தமிழகத்தின் அமைதியை, யாரும் கெடுத்து விடக்கூடாது என்பதற்காக தேவையற்ற  போராட்டம் நடத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான கைது நடவடிக்கை முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here