தமிழக மக்களே உஷார்., 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0
தமிழக மக்களே உஷார்., 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!
தமிழக மக்களே உஷார்., 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் தமிழகத்தில் வரும் 10ம் தேதி 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

வேலையில்லா பட்டதாரி கவனத்திற்கு.., நவ 11, 25 ல் வேலைவாய்ப்பு முகாம்.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதாவது வரும் நவம்பர் 9ம் தேதி, இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் வரும் 10ம் தேதி தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாகவும், நவம்பர் 11ம் தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here