இயக்குனர் பிரதீப் “லவ் டுடே” பட புரொமோஷனில் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் பிரதீப்:
தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பிரதீப். சமீபத்தில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் ரசிகர் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வரை எந்த ஒரு நெகட்டிவ் கமெண்ட்ஸ் இல்லாமல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நான் அம்மா ஆனதுக்கு அப்பறம் தான் புரியுது.., குழந்தை புகைப்படத்தை ஷேர் செய்து கண்கலங்கிய சாய்ஷா!!
இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பிரதீப் தளபதி விஜய்யை குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, தளபதி விஜய்க்கு அவர் ஒரு கதையை வைத்திருப்பதாகவும், ஆனால் இதை பத்தி டிஸ்கஸ் பண்றதுக்கான சரியான நேரம் இல்லை என்றும் தளபதி கதையை கேட்க தயாராக இருந்தால் நான் கதை சொல்ல தயராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.