தமிழகத்தில் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருவதால், முழு ஊரடங்கு பற்றி அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு குறித்து ஒரு தகவல் இணையத்தில் வலம் வருகிறது.
அரசின் நிலைப்பாடு:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெல்டா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மாநிலத்தில் 3 ம் அலை பரவல் தொடங்கிவிட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் எச்சரித்தார். தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தொற்று பரவல் அதிகரித்தாலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் அண்மையில் தெரிவித்தார். மேலும், இணையத்தில் வலம் வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இதுவரை இந்த நிலையே தொடர்வதால், மக்கள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்