தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பொங்கல் வாழ்த்து – இது தமிழ் இன நாள் என பெருமிதம்!!

0

தை முதல் நாளான இன்று, தமிழ் மக்கள் அனைவருக்கும்  இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 ஸ்டாலின் வாழ்த்து :

தமிழ் மக்கள் அனைவராலும், தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவுக்கும் தொழிலுக்கும் உறுதுணை புரிந்த சூரியனுக்கும், காளைக்கும் நன்றி சொல்லும் விதமாக தமிழர்களால் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இது தமிழ் இன நாள் என்றும் பொங்கல் மகிழ்நாள் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கழக ஆட்சி அமைந்து முதல் பொங்கல் என்பதால், இந்த நன்னாளில் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றுவேன் என  மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இது போக, பல்வேறு அரசியல் தலைவர்களும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here