தமிழகத்தில் மாணவர்கள், பெரியவர்கள் என பலரும் குடி பழக்கத்தால் உடல் நல கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். ஆனால் இதுவரை இதற்கான எவ்வித நடவடிக்கையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது “கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை, புதிய மது பாட்டில் ரகம் என ஊக்குவிக்கும் செயலிலே தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் பல குடும்பங்களும் சீரழிந்து வருகிறது. எனவே மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தி உள்ளார்.