தமிழகத்தில் டியூசன் சென்டர் நடத்துவது மற்றும் வீடுகளில் டியூசன் எடுப்பது போன்ற செயல்களை மேற்கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெடி பியரே தோற்கும் அளவிற்கு கொழுக் மொழுக்கென மாறிய ராசி கன்னா – உத்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!
அதிரடி உததரவு :
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த ஆசிரியை ராதா என்பவர் தன்னுடைய இடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் டியூசன் சென்டர் நடத்துவது அல்லது வீடுகளில் டியூசன் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதனை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
இது போன்ற செயல்களை புரியும் அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்த புகார்களை பெற, தனி தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்ணை உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இந்த செயலை தொடர்ந்து அனுமதித்தால், ஆசிரியர் பணியில் மேம்பாட்டை எதிர்பார்க்க முடியாது எனவும், இது முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் நோக்கில் சென்று வருவதாகவும் வேதனை தெரிவித்தார். நீதிபதியின் இந்த உத்தரவு, மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்