தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், அனைத்து தரப்பினரும் வாக்களிக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விடுமுறையை ஊழியர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், வாக்களித்ததற்கான சான்றை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்குமாறு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “தேர்தலன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை சலுகையை பெறுவதற்கு, ஊழியர்கள் சான்றளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது.” எனக்கூறி மறுத்துவிட்டனர்.