தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளதால் அனைத்து நுழைவுத் தேர்வுகள், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.
கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது:
கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாததால் பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனமும் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ரத்தாகும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்..? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை..!
இந்தியாவில் 3000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்..!
இதை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்கள் 90% தயார் நிலையில் உள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |