பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ்கள் வரை ஒரே கிளிக்கில் – தமிழக அரசு அசத்தல் திட்டம்..!

0

தமிழக மக்கள் தங்களுடைய லைசென்ஸ், பிறப்பு சான்றிதழ், காப்பீடு விவரங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை ஒரே கிளிக்கில் இணையதளத்தில் பெறுவதற்கு தமிழக அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது.

எளிதான முறை..!

தமிழக அரசின் இந்த புதிய திட்டத்தால் பொதுமக்கள் தங்களுடைய ஆவணங்களை எந்த விதமான ஆதாரமும் இன்றி எளிதில் பெற முடியும். மேலும் இந்த வழிமுறையானது பிளாக் செயின் சிஸ்டம் மூலம் உருவாக்கப்படுவதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இந்த முன்கணிப்பு சேவை மிகுந்த பயன் தரக்கூடியது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

OTP வழிமுறை..!

தமிழக மக்கள் அரசின் சேவைகளை பெறுவதற்காக தற்போது அரசு அலுவலகங்களுக்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது அரசு இ-சேவை உதவி மையங்கள் மூலமாகவோ அல்லது அவர்கள் வீடுகளிலிருந்தோ பெற்று வருகின்றனர். இந்த முறையை இ-கவர்னன்ஸ் கீழ் செயல்படும் இந்த திட்டம் எளிமையாக்கும். இந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய ரகசிய கடவுச் சொல் (OTP) மூலம் கிடைக்கும்படி செய்யப்படும்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பிளாக் செயின் சிஸ்டம்..!

இந்த பிளாக் செயின் சிஸ்டம் மூலம் சேமிக்கப்படும் தகவல்களை யாராலும் மாற்ற முடியாது. மேலும் தமிழக அரசு ஒரு பிளாக்செயின் தளத்தை ரூ .40 கோடி செலவில் கட்ட உள்ளது. சான்றிதழ்களை வழங்குவதற்கான பயன்பாட்டு மென்பொருள் பொருத்தமான முறையில் மாற்றியமைக்கப்படும். இதனால் வழங்கப்பட்ட ஆவணம் மின்னணு முறையில் மக்களின் எண் ஏற்கனவே மாநிலத்தின் ஏழு கோடி மக்களுக்காக தமிழ்நாடு இ-கவர்ணன்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது என சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here