தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரம் –  சுகாதாரத்துறை அறிவிப்பால் பீதியில் மக்கள்!!

0
தமிழகத்தில் ஒரே நாளில் உச்சமடைந்த கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? பொதுமக்கள் அச்சம்!!
தமிழகத்தில் ஒரே நாளில் உச்சமடைந்த கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? பொதுமக்கள் அச்சம்!!

தமிழகத்தில்  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

 சுகாதாரத்துறை அறிவிப்பு :

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது.  கடந்த டெல்டா பரவல் போது 4 முதல் 5  நாட்களில் இரட்டிப்பாக வந்த பாதிப்பு, தற்போதைய நிலையில் மூன்று நாட்களிலேயே இரட்டிப்பாகி விட்டது. அந்த வகையில், சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிகமாக இருப்பதாகவும், இந்த மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் 23 சதவீதம் மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும், 9 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் தேவை இருப்பதாகவும் 90%அதிகமான மக்கள்  2 தவணை தடுப்பூசி முழுமையாக செலுத்தாதவர்களாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, தடுப்பூசி செலுத்தாத மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here