குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பு பொருட்கள், பை இல்லாமல் கூட பெற்றுக் கொள்ளலாம் எனவும், அவர்களுக்கு விரைவில் பை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு :
தமிழக அரசால் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு, வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பொருட்களோடு, 20 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். தற்போது வரை 45.1% ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில், பை இல்லாமல் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அரசின், கவனத்திற்கு வந்த இந்த செய்திகள் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, பை இல்லாமல் 20 பொருட்களுடன் இந்த பரிசை விருப்பப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் பெற்று செல்லலாம் என்றும், இவர்களுக்கு தனியாக டோக்கன் வழங்கப்பட்டு, விரைவில் இவர்களுக்கு பை மட்டும் தனியே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகளை வைத்து, தொகுப்பு பொருட்களை விரைந்து வழங்குமாறு பொது விநியோக திட்ட அலுவலர்களுக்கு அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்