தற்போது சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக முதல்வர் பரப்புரை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று செல்லும் பாதையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் திரிந்துள்ளார். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார வேலைகள், கூட்டணி முடிவுகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் தேர்தலுக்கான அனைத்து வேலைகளையும் முனைப்புடன் செய்து வருகின்றனர். தற்போது தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் பரப்புரை வேலைகளில் இறங்கியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி அவர் இன்றும் நாளையும் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் பரப்புரைக்கு செல்வதாக திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேரனாம்பட்டு பகுதியில் ஒரு மர்ம நபர் வாகனத்தை வேகமாக ஒட்டி சென்று பொதுமக்கள் மீது இடித்துள்ளார்.
தாறுமாறான போஸில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த யாஷிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
இதனால் சிலர் காயமடைந்தனர். உடனே பொதுமக்கள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த நபரிடம் இருந்து துப்பாக்கி, பல நம்பர் பிளேடுகள் கையகப்படுத்தப்பட்டது. மேலும் அந்த நபரின் பெயர் அஜிஸ் என்றும் தெரிவித்துள்ளனர். முதல்வர் பரப்புரைக்கு வரும் பகுதியில் ஆயுதத்துடன் இந்த நபர் சுற்றி திரிந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.