தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!!

0

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கு விதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு :

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால், இரவு நேர ஊரடங்கு, வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் போன்ற கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கு விதிக்கப்படுத்தற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அண்மையில் வதந்திகள் பரவி வந்தது. இது குறித்து எந்த விளக்கமும் இதுவரை அரசின் சார்பில் வெளியாகவில்லை.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அடையாறு மண்டல அலுவலகத்தில் இயங்கும் சரவணா ஆலோசனை மையத்தை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கு விதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் எழுந்து வந்த முழு ஊரடங்கு குறித்த சர்ச்சைக்கு தற்போது அரசின் சார்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here