இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் மூலம் பல்வேறு விதமான மோசடி செயல்கள் நடைபெற்று வருவதால் பலரும் பணத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய மாநில அரசின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்குவதாக பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் போனில் தொடர்பு கொள்கின்றனர்.
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
அதனை உண்மை என நம்புவோர்களின் வாட்ஸ்அப்பில் QR கோடு அனுப்பி ஸ்கேன் செய்ய சொல்லி பணத்தை பறித்து வருகின்றனர். எனவே இதுபோன்ற அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். எந்த ஒரு அரசு அதிகாரிகளும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.