பொதுவாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய சாலைப் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் இருந்து சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதாவது தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் மார்த்தாண்டம் அருகில் சென்று கொண்டிருந்த தமிழக கேரள அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இந்த அசம்பாவிதத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சை வழங்கப்படும் வருகிறதாம்