தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணிநிரவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நடப்பு 2023-24 கல்வியாண்டில் பணி நிரவல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதில் கூடுதலாக ஆசிரியர் இருக்கும்பட்சத்தில், அவர்களின் பெயர் பட்டியலை குறிப்பிட்ட தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இவர்கள் ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ள பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு பணி நிரவல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் அட்டை வழங்குவதில் இப்படி ஒரு சிக்கலா?? வெளியான திடுக்கிடும் தகவல்!!!