தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை எனவும், தரமற்றதாக இருப்பதாகவும் நுகர்வோர்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அதாவது உணவுப் பொருட்களை பொருட்களை கிடங்கிலிருந்து எடுக்கும் போதே, அதனின் தரத்தை சோதிக்க வேண்டும். பொது விநியோக திட்ட பொருட்கள் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். 3 மாதத்திற்கு மேல் உள்ள துவரம் பருப்பு உள்ளிட்டவைகளை குடோனில் உடனடியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்களே., அகவிலைப்படி மட்டுமல்ல HRAவும் உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!
இது தவிர, ரேஷன் அட்டைதாரர்களுக்கு சரியான நேரத்தில் பொருட்களை விநியோகிப்பதை உறுதி செய்து சமூக வலைத்தளங்களில் புகார் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த உத்தரவு பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.