‘ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு’ – ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய ரஜினி..!

0
ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்
ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்

கொரோனா வைரஸ் சதாரண அடி அல்ல பிசாசுத்தனமான அசுர அடி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் உலக அளவில் இந்தியா கொரோனா தொற்றில் 6 வது இடத்தில உள்ளது. தமிழ்நாட்டின் நிலைமையும் மோசமாகி வருகிறது.

ரஜினிகாந்த்

இதனை தொடர்ந்து, கொரோனா தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்
ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்

இப்போதைக்கு இந்த வலி தீராது போல தெரிகிறது என தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் பல கடுமையான வேதனைகளை தரும் எனவும் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏவுகணை தாக்குதலையும் தாங்கும் – பிரதமர் மோடிக்காக வரவுள்ள 2 சிறப்பு விமானங்கள்..!

உங்கள் குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சரீர விலகலை கடைபிடிக்காமலும், முகக்கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள் எனவும் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்
ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here