இந்தியாவில் தற்போது 60 வயதிற்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனவிற்கான தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 60 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மற்றும் 45 வயதிற்கு அதிகமான உடல் பலவீனமானவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது அந்த வகையில் தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் கமல்ஹாசன் தடுப்பூசியை போட்டு விழிப்புணர்வு அளித்தார்.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் ட்விட்டர் வீடியோ!!
தற்போது இவரை தொடர்ந்து ராதிகா தடுப்பூசியை போட்டுள்ளார். இவர்களை போல் நடிகர் பொன்வண்ணன் மற்றும் அவரது மனைவி சரண்யா பொன்வண்ணனும் கொரோனவிற்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். தற்போது அவர்களது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
entertainment