தமிழில் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது ரூ.25 லட்சம் கொரோனா நிதியாக வழங்கியதை அடுத்து அது 2.5 கோடி கொடுத்தார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பலரும் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
கொரோனா நிதி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பலரும் தீவிர முயற்சியில் களமிறங்கி வருகின்றனர். இருந்த போதிலும் இந்த கொரோனா பலரையும் காவு வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது 2வது அலையாக உருவெடுத்துள்ளது.
நாள் தோறும் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்தால் இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்.
இதனால் மாநில அரசுகள் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பலரும் கொரோனாவிற்காக நிதியுதவி அளித்து வருகின்றனர். ஏற்கனவே சிவகுமார் குடும்பம் ரூ.1 கோடி அளித்திருந்தது.
அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சம் அளித்திருந்தார். தற்போது முன்னணி நடிகரான தல அஜித்தும் ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக அளித்துள்ளார். ஆனால் வலைத்தளங்களில் 2.5 கோடி கொடுத்ததாக செய்திகள் பரவி வருகிறது.
மேலும் இதற்கு மீம்ஸ் போட்டும் வருகின்றனர். கோடி கோடியாக சாம்பாதித்தும் 25 லட்சம் நிதியுதவி தந்ததையும் பலரும் கேலி செய்தும் வருகின்றனர்.