சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் 12 மணி வரை கடைகள் திறப்பு !!! – தமிழக அரசு அறிவிப்பு
தற்போது தமிழக அரசு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் 12 மணி வரை கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஊரடங்கில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனவே மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக சிரமத்திற்கு உள்ளாயினர். அதன் பிறகு தொற்று பரவல் குறையாத நிலையில் சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகள் போன்ற சில கடைகள் செயல்பட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் மே 11ற்கு பிறகு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்தது தமிழக அரசு. தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கின் நாட்களை போல் நாளை(சனி) நாளை மறு நாள்(ஞாயிறு) கடைகள் வழக்கம் போல் 12 மணி வரை செயல்படும் என்று அறிவித்துள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிறு.
காலை 8மணி முதல் 12மணி வரை
டாஸ்மார்க் திறக்கலாம்