நடக்க இருக்கும் டி 20 தொடர் போட்டிகளில் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
டி 20 தொடர்
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் முதலில் 4 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. இந்த போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி 3 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனை அடுத்து இந்த இரு அணிகளும் வரும் 12 ஆம் தேதி (நாளை) முதல் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. அதன் பிறகு 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளில் இந்த இரு அணிகளும் விளையாடவுள்ளன. அந்த போட்டிகள் புனேவில் நடைபெற இருக்கிறது.
காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா – வைரலாகும் ட்விட்டர் வீடியோ!!
இந்த போட்டிகளில் விளையாட இருக்கும் வீரர்களின் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனை அடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது, “இங்கிலாந்து அணியுடன் நடக்க இருக்கும் டி 20 தொடர் போட்டிகளில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் விளையாடுவார்கள். மூன்றாவது தொடக்க வீரராக ஷிகர் தவான் இருப்பார்”
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
“இப்படி ஒரு அணியாக விளையாடுவதை தான் அனைவரும் விரும்புகிறோம். புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். அணியில் அஸ்ஹவினை சேர்ப்பது குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டு வருகின்றது. அதே போல் வாஷிங்டன் சுந்தர் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அணியில் ஒரே மாதிரியான சுழற்பந்து வீச்சாளர்களை வைத்திருப்பது கடினம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.