தமிழகத்தில் அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தாய்மொழியான தமிழ் மொழி கல்வி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இமயம் முதல் குமரி வரை “செம்மொழியான தமிழ் மொழியாம்” என உரக்க ஒலிக்கச் செய்த, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நினைவு கூறும் விதமாக பள்ளிக்கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடத்திட்டம் 9ம் வகுப்பு புத்தகத்தில் 7வது பக்கத்தில் இடம்பெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதில் நாவும் பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள், இயல், இசை, நாடகம் எழுதி முத்தமிழுக்கும் முழுமையாக தன்னை அர்ப்பணித்தவர் என பல்வேறு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா குறித்து எழுதிய, “உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே” என்ற கவிதை நடைகளும் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.