தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்த வெப்பத்தை தணிக்கும் விதமாக தமிழகத்தில் இருக்கும் முக்கிய இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களான திருவள்ளூர், பெரம்பலூர், வேலூர், சேலம், நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும். அது போக மதுரை, தேனி, தென்காசி, திருப்பூர், கன்னியாகுமரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் அம்மாவட்டங்களில் இருக்கும் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.