Saturday, April 27, 2024

சுஷாந்த் சிங்கிற்கு நீதி வேண்டும்- சகோதரி பிரதமருக்கு கடிதம்!!

Must Read

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என சுஷாந்த் சகோதரி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தற்கொலை:

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது 34 வயதில் தற்கொலை செய்து கொண்டார் . அவரது மரணத்தால் பாலிவுட் துறை பெரும் அதிர்ச்சியடைந்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடர்பாக நடிகரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் சிபிஐ விசாரணை கோருகின்றனர், ஆனால் இந்த வழக்கு பீகார் மற்றும் மகாராஷ்டிரா போலீசாருக்கு இடையே சிக்கியுள்ளது.

தொடரும் மர்மம்:

கடந்த மாதம் ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். அவர் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தார் என கூறப்படுகிறது.ஆனால் இதுவரை அவர் தற்கொலைக்கு பின்னால் உண்மையான காரணம் வெளியிடப்படவில்லை.

சகோதரி வேண்டுகோள்:

இப்போது சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது ட்விட்டர் கணக்கில் ட்வீட் செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் பிரதமர் மோடிக்கு ட்வீட் செய்து ஒரு கடிதம் எழுதினார்,

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதில்., ‘நான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி, முழு விவகாரத்தையும் உடனடியாக விசாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் நீதித்துறை முறையை நாங்கள் நம்புகிறோம், நீதியை எதிர்பார்க்கிறோம். நீங்கள் சத்தியத்துடன் நிற்பீர்கள் என்று என் இதயம் கூறியுள்ளது.

நியாயம் வேண்டும்:

நாங்கள் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பாலிவுட்டுக்கு வந்தபோது எனது சகோதரருக்கு யாரும் தெரிந்தவர் இல்லை.

முந்தானையை விலக்கி ரசிகர்களை மூச்சடைக்க வைத்த செந்தூரப்பூவே ‘தர்ஷா’ – மாஜாவான போட்டோ வைரல்!!

sushanth and his sister swetha
sushanth and his sister swetha

இந்த விஷயத்தை உடனடியாக ஆராய்ந்து எல்லாவற்றையும் நியாயமாகக் கையாளப்படுவதையும், எந்த ஆதாரமும் சிதைக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீதி மேலோங்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று டிவீட் செய்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: பஞ்சாப் அசத்தல் பேட்டிங்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றி!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தொடக்க...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -