ஆஸ்கர் தேர்வு குழுவுக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சூர்யாவுக்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு வாழ்த்து:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சூர்யா. உலக நாயகனுடன் இணைந்து அண்மையில் வெளியான விக்ரம் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள், ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் தேர்வுக்குழுவில் கலந்துகொள்ள சூர்யாவிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆஸ்கர் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். இது குறித்து வாழ்த்து பதிவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கை தேர்ந்த நடிப்பால், புகழின் உச்சத்திற்கு சென்ற தம்பி சூர்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வானமே எல்லை! என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
வானமே எல்லை!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்