மொபைல் போனில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என MY V3 ADs நிறுவனம் மக்களுக்கு அறிவிதித்திருந்தது. இதை நம்பி தமிழகம், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மக்கள் MY V3 ADs என்ற நிறுவனத்தில் தங்களது முதலீடை போட்டு ,அதன் மூலம் வருமானம் பார்த்து வருகின்றனர். ஆனால் இந்த நிறுவனத்தால் வருங்காலத்தில் மக்கள் ஏமாற வாய்ப்புள்ளது என கோவை போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன் பேரில் இந்நிறுவனத்தின் நிறுவனரையும் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
ஆனால் பல்லாயிர கணக்கான இந்த நிறுவனத்திற்கு தங்களது ஆதரவை தெருவித்திருந்தனர். இப்படி இருக்கையில் MY V3 ADs நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் 100 பேருக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்திருந்தனர். அதையடுத்து திடீரென மாநகர காவல் நிலையத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேருக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.