கோலிவுட் திரையில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான இவர் ஜெயிலர் படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்திருந்தார். தற்போது இவர் தனது 171 வது படத்தில் நடித்து வருகிறார் .இப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் தா. செ. ஞானவேல் இயக்குகிறார். இதில் இவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
மேலும் இப்படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்ட நிலையில் இப்படத்தின் 80% சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது வரும் ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், இதில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
பழனி முருகன் கோவில் பிரசாத முறையில் புதிய மாற்றம்., அறங்காவலர் குழு அதிரடி உத்தரவு!!!