தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில், தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி கோவிலில் காலவதியான பஞ்சாமிர்த பிரசாதம் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து பழனி கோவிலில் பிரசாதங்களை பேக்கிங் செய்யும் முறையை மாற்றி அமைக்க அறங்காவலர் குழு சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி லட்டு, அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்களுக்கு காலாவதி தேதி அச்சிட்டு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பழனி பஞ்சாமிர்தத்தை சுமார் 15 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.