இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து வருகிற நிலையில் அதனை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அவசரநிலை பிரகடனம்:
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் அந்நாட்டின் பிரதமர் என்று மக்கள் அவரை ராஜினாமா செய்யுமாறு தொடர்ந்து நடத்தப்பட்ட கடுமையான போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது.இதை தொடர்ந்து பிரதமர் மற்றும் அதிபர் குடும்பத்துடன் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களின் மாளிகைகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்றும் மக்களின் போராட்டம் உச்சத்தை அடைந்து வருவதால் இதனை தடுக்கும் விதமாக 100 க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் அதிரடிப்படை வீரர்கள் கலவர பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கண்ணீர் புகை குண்டு வீசி பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.இந்த சூழல் முற்றிலும் மாறாமல் இருப்பதால் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.இதனால் கொழும்பு போன்ற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்