தமிழக பள்ளிகளுக்கு இந்த தேதி வரை சிறப்பு வகுப்புகள்.., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!

0
தமிழக பள்ளிகளுக்கு இந்த தேதி வரை சிறப்பு வகுப்புகள்.., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்புகளுக்கான தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்னும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 10, 12ஆம் தேதி நடைபெறும் தேர்வுகள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 22, 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here