மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா சூரரைப்போற்று பொம்மி?? அவரே வெளியிட்ட தகவல்!!

0

சூரரை போற்று திரைப்படத்தின் மூலமாக பிரபலமான அபர்ணா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூரரை போற்று பொம்மி

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினித்துறையில் நுழைந்தார். இதற்கு பின்பு சர்வம் தாளமயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுக்கடுத்து சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலமாக மொத்த தமிழ் உலகையே திரும்பி பார்க்க வைத்தார். இந்த திரைப்படத்தில் அபர்ணா, சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொம்மி மாதிரி பெண் கிடைக்கவேண்டும் என்று இளைஞர்கள் கேட்கும் அளவுக்கு இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தின் மூலமாகவே இவர் அனைவரின் தமிழ் உள்ளங்களையும் கவர்ந்தார்.

தற்போது அபர்ணா உடல்நிலை குறித்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அபர்ணா கடுமையான காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் உடல்நிலை மோசமாகி கொண்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அபர்ணாவுக்கு கொரோனவாக இருக்குமோ என்று பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அபர்ணா தனக்கு ஒன்றும் இல்லை நலமாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். யாரும் இது போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here