இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் அனைத்து பருவத்தினரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் பொய்யான செய்திகள், அனாவசியமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.
இம்மசோதா மூலம் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 14 முதல் 15 வயது குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இம்மசோதாவிற்கு ப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசான்டிஸ் ஒப்புதலும் வழங்கி உள்ளார்.