தமிழக பள்ளிகளில் ஏப்ரல் 1 தேதி முதல் வரவிருக்கும் மாற்றம்.., தலைமை ஆசிரியருக்கு பறந்த உத்தரவு!!!

0
தமிழக அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பல மாற்றங்கள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதாவது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் இந்த ஸ்மார்ட் போர்டுகளை உரிய இடத்தில் உடனடியாக நிறுவப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான ஒரு மடிக்கணினி நாளை மாலை 5 மணிக்குள் வழங்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here