கால்நடைத்துறையில் 1141 பணியிடங்களுக்கான தேர்வு – 6 மையங்களை ரத்து செய்தது டிஎன்பிஎஸ்சி..!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்த கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) 1141 பணி இடங்களுக்கான தேர்வு மையங்களில் 6 மையங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

கடந்த 2019ம் வருடம் டிசம்பர் 17ம் தேதிக்குள் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் பிப்ரவரி 23, 2020 அன்று தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

2016 வி.ஏ.ஓ தேர்வில் முறைகேடு – இருவரை கைது செய்தது சிபிசிஐடி..!

இந்நிலையில் இந்த தேர்வுகளுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த 7 தேர்வு மையங்களில் 6 மையங்களை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் சென்னையில் மட்டுமே இந்த தேர்வானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here