பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு பிறந்த ஆண் குழந்தை – அவரே வெளியிட்ட பதிவு!!

0

திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வரும் ஷ்ரேயா கோஷலுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தன ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரேயா கோஷல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் தான் ஸ்ரேயா கோஷல். பெங்காலி பெண்ணான இவர் ஷிலாடிடியா என்பவரை 2015 ஆம் ஆண்டு திருமனம் செய்துக்கொண்டார். இவருக்கு சுத்தமாக தமிழ் தெரியவே தெரியாது. ஆனாலும் அந்த வரிகளை உணர்ந்து பாடி அவரது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார் ஸ்ரேயா கோஷல்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது தான் அவரது பெரிய திறமையே. இதுவரையிலும் 2765 பாடல்களை பாடியுள்ளார். அனைத்துமே மாஸ் ஹிட். 19 மொழிகளுக்கு மேல் இவரது பாடல் திறமைகளை அரங்கேற்றியுள்ளார். இவரது பாடல்கள் தான் தற்போது உள்ள இளசுகளின் ஃபேவோரைட் என்றே சொல்லலாம். கேக்க கேட்க திகட்டாத குரல் தான் அவருக்கு கடவுளின் ஆசிர்வாதம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி இருக்க தற்போது அவர் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்பமாக இருந்த அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தன் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்க வெளிப்படுத்தியுள்ளார். அதாவது தனக்கு மதிய நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது, இந்த சந்தோசத்தை இதுவரையிலும் நான் அனுபவித்ததில்லை.

என் குடும்பம் மொத்தமும் மிகவும் சந்தோசமாக உள்ளது. என் குழந்தைக்காக வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார். மேலும் பலரும் ஸ்ரேயா கோஷலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here