இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் குறுகிய கால சேவை திட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ராணுவத்தில் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
குறுகிய கால பணி:
உலகளவில் சக்தி வாய்ந்த ராணுவத்தில் இந்திய ராணுவமும் ஒன்று. 13 லட்சம் வீரர்களுடன் அசைக்க முடியாத ராணுவமாக திகழும் இந்திய ராணுவத்தை மேலும் பலப்படுத்த பல்வேறு புதிய சீர்திருத்த நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் 3 ஆண்டுகள் மட்டும் ராணுவத்தில் சேவையாற்றும் குறுகிய கால பணி திட்டத்தை அனுமதிக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், ராணுவத்தில் திறமையான இளைஞர்களை சேர்க்க பல்வேறு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இளைஞர்கள் குறுகிய காலம் ராணுவத்தில் பணியாற்றும் சேவை 10 ஆண்டுகளாக உள்ளது. இதனை 3 ஆண்டுகளாக குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான புதிய சீர்திருத்த நடைமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |