பாலியல் சீண்டல் எதிரொலி: சிவசங்கர் பாபா நடத்தும் பள்ளியில் இருந்து 50% மாணவர்கள் விலகல்!!!

0

சிவசங்கர் பாபா நடத்தும் பள்ளியில் இருந்து, 50 சதவீத மாணாக்கர்கள் டிசி வாங்கிச் சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் தற்போது ராஜினாமா செய்துள்ளனர்.

பிரபல சாமியார் சிவசங்கர் பாபா தன் பள்ளியில் பயிலும் மாணவிகளை பக்தையென கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. மேலும் சமூகவலைத்தளங்களில் சிவசங்கர் பாபா மீது அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் புகார்களைக் கூறியிருந்தனர்.

 

இதையடுத்து மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் சார்பில் சிவசங்கர்பாபா, பள்ளி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியது.   மேலும் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இதனால் இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் தொடர்ந்து அந்த பள்ளியிலிருந்து டிசி வாங்கி வேறு பள்ளிகளில் சென்றுள்ளனர்.  இதுவரை 50 சதவீதம் மாணவர்கள் டிசி வாங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here