முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார் நடிகர் யோகி பாபு… புகைப்படத்தின் மூலம் விழிப்புணர்வு!!!

0

கொரோனா வைரஸ் நாடு எங்கும் பரவி பல்வேறு உயிர்களை பலி வாங்கி உள்ளது. அதனை தடுக்க மிக பெரிய ஆயுதமாக  விளங்குவது தடுப்பூசிகள் மட்டுமே என்று மருத்துவ நிபுணர்கள் முதல் அனைவரும் தெரிவித்து வருகின்றனர் . மேலும்  அதனை பற்றிய வதந்திகளை களைய அரசியல் பிரமுகர்கள் ,சினிமா துறையினர் உட்பட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வரிசையில் யோகி பாபு-வும் தற்போது முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி உயிர்களை காவு வாங்கி கொண்டு தான் இருக்கிறது. இதற்கு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதன் பரவலை கட்டுப்படுத்த ,அனைத்து தரப்பினருடனும் இருந்து பெறப்படும் ஒரே பதில் தடுப்பூசி. எனவே இதனை கருத்தில் கொண்டு அரசும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்தும் மற்றும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த தடுப்பூசிகள் பற்றிய தவறான வதந்திகள் மக்கள் மத்தியில் இருந்து தான் வருகின்றன. இந்த பயத்தை மற்றும் வதந்திகள் போக்கவே முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களை செலுத்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் தொகுப்பாளினி டிடி, நடிகர் சஞ்சீவ் மற்றும் பல சின்னத்திரை பிரபலங்கள், நடிகை ஜனனி ,நடிகர் கார்த்தி மற்றும் பலர் தடுப்பூசி போட்டு கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அந்த வரிசையில் நகைச்சுவை நடிகர்  யோகிபாபு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று எம்.ஜி.எம் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here