அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டி தொடரப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்து, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று (அக்டோபர் 9) செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Enewz Tamil WhatsApp Channel
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின் உடல்நிலை சீராகியதால் மீண்டும், செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.
மதுரையில் டைடல் பார்க்., 10000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு., முதற்கட்ட பணி எப்போது? ஆணையர் அறிக்கை!!